திருப்பூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது. 



இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது. 



அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...