திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது.

இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது.

அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது.

இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது.

அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.