திருப்பூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது. 



இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது. 



அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...