கோவை, நீலகிரியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையைப் பொறுத்த வரையில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரத்திலும் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மட்டும், அவலாஞ்சியில் 285 மி.மீ, அப்பர் பவானியில் 206 மி.மீ, எமரால்டு 94 மி.மீ, தேவாலா 67 மி.மீ, கூடலூர் 64 மி.மீ, உதகமண்டலம் 47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குந்தா, எமரால்டு, அப்பர் பவனி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நீலகிரியில் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஹெல்ப்-லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

0423-2223828, 0423-2223807, என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டும், 8608000100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...