நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார்

கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர், பல்வேறு கருத்துக்களை மேடையில் பேசினார். இதற்கு, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதால், அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். 

இதையடுத்து, கனியூர் சுங்கச்சாவடி அருகே அமீர் மற்றும் எம்.எல்.ஏ., தனியரசு சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் அமீர் பேசியுள்ளார். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தனியரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் பேசியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...