கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர், பல்வேறு கருத்துக்களை மேடையில் பேசினார். இதற்கு, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதால், அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து, கனியூர் சுங்கச்சாவடி அருகே அமீர் மற்றும் எம்.எல்.ஏ., தனியரசு சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.,வின் மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் அமீர் பேசியுள்ளார். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தனியரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் பேசியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவையில் நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர், பல்வேறு கருத்துக்களை மேடையில் பேசினார். இதற்கு, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதால், அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து, கனியூர் சுங்கச்சாவடி அருகே அமீர் மற்றும் எம்.எல்.ஏ., தனியரசு சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.,வின் மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் அமீர் பேசியுள்ளார். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தனியரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் பேசியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.