கோவையில் நடிகர் அமீர், தனியரசு ஆகியோர் மீது தாக்குதல்: கற்களை வீசியவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு ஆகியோர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு ஆகியோர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் (புதிய தலைமுறை) சார்பில் விவாதமேடை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அ.தி.மு.க., பிரமுகர் செம்மலை, தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, செ.கு.தமிழரசு மற்றும் நடிகர் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் நடிகர் அமீர் பேசும் போது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் இனக்கலவரம் என பலர் கூறுகின்றனர். அப்படியென்றால், கோவையில் நடைபெற்ற கலவரத்தை என்ன என்று சொல்வது..?,” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவரது, இந்தப் பேச்சைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால், நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிகர் அமீரை நிகழ்ச்சியில் இருந்து பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முன்கூட்டியே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

இதனிடையே, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய அமீர், எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கே. பாலகிருஷ்ணன் சென்ற காரை, கனியூர் சுங்கச்சாவடி அருகே சில மர்ம நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பிரபலங்களின் கார்களின் மீது கற்களை வீசிய நபர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் பொருட்களை சேதப்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...