நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது.
நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக, தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், தேயிலை விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக தேசிய படுகர் பார்ட்டி அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக, தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், தேயிலை விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக தேசிய படுகர் பார்ட்டி அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.