தேசிய படுக பார்ட்டி சார்பில் வரும் 13-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது.

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக, தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், தேயிலை விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக தேசிய படுகர் பார்ட்டி அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...