கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாட்டுப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் இன்று ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை சிவில் நீதிபதி (Civil Judge Examination ) பதவிக்கான போட்டித் தேர்வானது கோயம்புத்தூர், சித்தாபுதூரிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரங்கநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி சுமார் 949 எண்ணிக்கையாலான தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுதத் தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாட்டுப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் இன்று ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை சிவில் நீதிபதி (Civil Judge Examination ) பதவிக்கான போட்டித் தேர்வானது கோயம்புத்தூர், சித்தாபுதூரிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரங்கநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி சுமார் 949 எண்ணிக்கையாலான தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுதத் தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.