ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு ஏழு ஆண்டு சிறை

திருப்பூர்: காங்கயத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர்: காங்கயத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் செங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பாலசுப்பிரமணியம் (55). விவசாயி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தனது தந்தையின் பெயரில் இருந்த விவசாய மின் இணைப்புகள் மற்றும் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை தனது பெயரில் மாற்றம் செய்துதரக் கோரி காங்கயத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

மனுவைப் பெற்ற மின்வாரிய அலுவலர் செல்வராஜ் (65) ரூ.3000-ம் லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ரூ.1500 தரும்படி செல்வராஜ் கேட்டுள்ளார். அதற்கும் மறுக்கவே இறுதியில் 3 மின் இணைப்புகளுக்கும் ரூ. 750 தரும்படி கேட்டுள்ளார் செல்வராஜ். இதையடுத்து பாலசுப்பிரமணியம் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் மார்ச் 9-ம் தேதி செல்வராஜ், பாலசுப்பிரமணியத்திடம் இருந்து லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வராஜை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் செல்வராஜூக்கு ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 7-ன் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரிவு 13(2) ன்படி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2000 அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, செல்வராஜ் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...