கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய நவீன செயல்முறைகள் பின்பற்றுவது தொடர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.


Coimbatore: கோவையில் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் (IWMA) சார்பில், கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்சி செய்து மீள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

'கழிவு மேலாண்மையில் நெட் ஜீரோ' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஆபத்தான கழிவுகளை கையாளுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தொழில்துறையினரின் நடவடிக்கைகள் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் சி.ஐ.ஏ. தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவர் தியாகராஜன், இணை செயலாளர் நடராஜன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த திட்டங்கள், தூய்மையான ஆற்றல் மாற்றம், கழிவிலிருந்து வள மீட்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கான நிதி மற்றும் மானிய வாய்ப்புகள் குறித்த சிறப்பு அமர்வுகளும் கருத்தரங்கில் இடம்பெற்றன.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...