பரதம் உள்ளிட்ட கலைப் போட்டிகளின் பிரிவுகளில் 'தமிழ்நாடு பொன்விழா ஆண்டு' கொண்டாட்டம்

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.



இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டாக இவ்வாண்டு தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கலை, விளையாட்டு, கட்டுரை கவிதை, பேச்சு போட்டிகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில், தமிழிசை பாட்டுப்போட்டி, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் கோவையில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

இம்மூன்று பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அனுப்பப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் இம்மூன்று பரிசு பெறுபவர்களுக்கும் தங்கப்பதக்கம் 4 கிராமில் வழங்கப்படும். தமிழிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை மண்டல உதவி இயக்குநர், மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை (அரசு இசைக்கல்லூரி வளாகம்) செட்டிப்பாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம் பட்டி, கோயம்புத்தூர் - 641050 என்ற முகவரிக்கு வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டி நடைபெறும் நாள் இடம் ஆகிய விவரங்களைப் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் அலுவலகத்தை 0422-2610290 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...