கோவையில் வரும் 23-ம் தேதி விவசாயிகளுக்கான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி

கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.

கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் மட்டுமே நடக்கிறது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற 'உழவே தலை' முதல் பகுதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில் மண்வளம், நீர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த விவசாயம், வேளாண் விற்பனை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும். எனவே, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...