கோவையில் வரும் 23-ம் தேதி விவசாயிகளுக்கான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி

கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.

கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் மட்டுமே நடக்கிறது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற 'உழவே தலை' முதல் பகுதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில் மண்வளம், நீர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த விவசாயம், வேளாண் விற்பனை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும். எனவே, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....