கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.
கோவை: விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான 'உழவே தலை 2.0' நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்கிறது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் மட்டுமே நடக்கிறது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற 'உழவே தலை' முதல் பகுதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில் மண்வளம், நீர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த விவசாயம், வேளாண் விற்பனை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும். எனவே, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் மட்டுமே நடக்கிறது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற 'உழவே தலை' முதல் பகுதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில் மண்வளம், நீர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த விவசாயம், வேளாண் விற்பனை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும். எனவே, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.