கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ரயில் மூலம் கோவைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்தின் முன்பு கனரா வங்கி, பாரத ஸ்டேட் பேங்க், யு.டி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலும் அந்த இயந்திரங்களில் பணம் இருப்பதில்லை என்றும், அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இதனால், கோவைக்கு வரும் பயணிகள் பணம் எடுப்பதற்கு வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் இயங்காமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோவைக்கு வரும் வெளியூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் மூலம் கோவைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்தின் முன்பு கனரா வங்கி, பாரத ஸ்டேட் பேங்க், யு.டி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலும் அந்த இயந்திரங்களில் பணம் இருப்பதில்லை என்றும், அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இதனால், கோவைக்கு வரும் பயணிகள் பணம் எடுப்பதற்கு வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் இயங்காமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோவைக்கு வரும் வெளியூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.