ஜாதியை கூறி குடியரசு தலைவரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஸ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றபோது தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு தலைவரை கோவிலினுள் அனுமதிக்காதது மனித உரிமை மீறல் எனவும் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவரையே அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் கோஷங்களை எழுப்பினர்.



மேலும், மத்திய அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டத்தை திருத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Video: Laxman

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...