கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஸ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றபோது தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு தலைவரை கோவிலினுள் அனுமதிக்காதது மனித உரிமை மீறல் எனவும் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவரையே அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், மத்திய அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டத்தை திருத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Video: Laxman