பத்து வயது சிறுமையை கடத்த முயற்சி: பொதுமக்களிடம் சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார். 

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது. 

மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...