திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது.
மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது.
மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.