பத்து வயது சிறுமையை கடத்த முயற்சி: பொதுமக்களிடம் சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார். 

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது. 

மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....