பணத்தை தவறவிட்ட நபரிடம் தேடி பிடித்து ஒப்படைத்த கோவை போலீஸ்

கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்சவர் ஜான் கெண்ணடி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் இவர் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பைக்கில் வைத்திருந்த முப்பத்து ஒன்பதாயிரம் ரொக்க பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், எ.டி.எம் கார்டு ஆகியவற்றை தவறவிட்டு சென்றுவிட்டார். 

இந்த நிலையில், நேற்று மதியம் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் பாலசுப்பரமணி என்ற உதவி ஆய்வாளர், பயிற்சி காவலர் அருள்முருகன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் ஒரு பை தனியாக கிடைப்பதை பார்த்தனர். பின்பு அதனை சோதனை செய்த போது அதில் முப்பத்து ஒன்பதாயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. 

பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பையில் இருந்த வங்கி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி அந்த பணம் ஜான் கென்னடியுடையது என உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி பணத்தை ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...