கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்சவர் ஜான் கெண்ணடி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் இவர் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பைக்கில் வைத்திருந்த முப்பத்து ஒன்பதாயிரம் ரொக்க பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், எ.டி.எம் கார்டு ஆகியவற்றை தவறவிட்டு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், நேற்று மதியம் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் பாலசுப்பரமணி என்ற உதவி ஆய்வாளர், பயிற்சி காவலர் அருள்முருகன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் ஒரு பை தனியாக கிடைப்பதை பார்த்தனர். பின்பு அதனை சோதனை செய்த போது அதில் முப்பத்து ஒன்பதாயிரம் பணம் இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பையில் இருந்த வங்கி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி அந்த பணம் ஜான் கென்னடியுடையது என உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி பணத்தை ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.