நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.
நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.