பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி 3,000 கி.மீ., தூரம் பெண்ணின் இருசக்கர சாகச வாகனப் பயணம் : உதகையில் தொடக்கம்

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார். 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார். 

முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...