கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி கொலை : வார்டன்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை.



கோவை: மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கோவை மத்திய சிறையில் நேற்று கைதிகள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் நடந்த கொலை தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கைதியின் கொலை தொடர்பாக பணியின் போது அலட்சியமாக இருந்ததாக சிறை தலைமை வார்டன் முனுசாமி மற்றும் வார்டன் கருப்பசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசாரணை 

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதில் இறந்து போன கைதியின் உடலில் உள்ள மச்சங்கள், காயங்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 



மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருங்கல்லையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மத்திய சிறையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...