கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி கொலை : வார்டன்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை.



கோவை: மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கோவை மத்திய சிறையில் நேற்று கைதிகள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் நடந்த கொலை தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கைதியின் கொலை தொடர்பாக பணியின் போது அலட்சியமாக இருந்ததாக சிறை தலைமை வார்டன் முனுசாமி மற்றும் வார்டன் கருப்பசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசாரணை 

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதில் இறந்து போன கைதியின் உடலில் உள்ள மச்சங்கள், காயங்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 



மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருங்கல்லையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மத்திய சிறையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...