குற்றவாளிகளை பிடிக்க சென்ற கோவை போலீசுக்கு கத்திக் குத்து

கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.



கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது. 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை கே.ஜி.காலனியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பழனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க பழனி சென்றனர். 

அப்போது, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றனர். மேலும், போலீசாரை அவர்கள் கத்தியால் தாக்கினர். இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டுப்பட்டது.



இந்த நிலையில், அவருக்கு பழனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் ஆறுமுக நயினார்-ஐ இன்று மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி, காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளைப் பிடிப்பதில் துரிதமாக செயல்பட்ட தனிப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


Video: Laxman

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...