கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.
கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை கே.ஜி.காலனியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பழனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க பழனி சென்றனர்.
அப்போது, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றனர். மேலும், போலீசாரை அவர்கள் கத்தியால் தாக்கினர். இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டுப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு பழனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் ஆறுமுக நயினார்-ஐ இன்று மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி, காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளைப் பிடிப்பதில் துரிதமாக செயல்பட்ட தனிப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
Video: Laxman