ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உதகை மாநகராட்சி : மத்திய அரசு

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உதகை நகராட்சி சேர்க்கப்படும் என மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் பினாக்கி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உதகை நகராட்சி சேர்க்கப்படும் என மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் பினாக்கி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உதக மண்டல நகராட்சிக்குட்பட்ட காந்தள் பதியில் இயங்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை 9 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் பினாக்கி மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார். 



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதோடு எந்த ஒரு மாநிலத்திற்கும் கிடைக்காத வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. உதகமண்டல நகராட்சியில் இயங்கும் இந்தக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் 90% வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். 

கூட்டத்தில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிஷ்ணன், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பது கள ஆய்வின் போது தெரிய வந்துள்ளதாகக் கூறினார். மேலும், இதற்காகப் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...