கல்விக் கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு மாணவன் வெளியேற்றம் : பள்ளியைக் கண்டித்து மாணவன் தந்தையுடன் தர்ணா

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய இலவச கல்விச் சட்டத்தின்கீழ் சேர்த்துள்ளார். இந்தாண்டு 1-ம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை இன்று பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டனம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளது. இதனையறிந்து கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவனும், அவனது தந்தையும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவன் காந்திஜி எழுது பலகையில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்ற வாசகத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, 'கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும். பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

திருப்பூரில் கட்டாய இலவச கல்விச்சட்டம் முறையாக தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறை கண்டு கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...