கல்விக் கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு மாணவன் வெளியேற்றம் : பள்ளியைக் கண்டித்து மாணவன் தந்தையுடன் தர்ணா

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய இலவச கல்விச் சட்டத்தின்கீழ் சேர்த்துள்ளார். இந்தாண்டு 1-ம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை இன்று பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டனம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளது. இதனையறிந்து கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவனும், அவனது தந்தையும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவன் காந்திஜி எழுது பலகையில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்ற வாசகத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, 'கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும். பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

திருப்பூரில் கட்டாய இலவச கல்விச்சட்டம் முறையாக தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறை கண்டு கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....