ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதலமைச்சர்

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதாவது:- 

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு ஒன்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை (தட்டு, குவளை, தாள்கள்) தடை செய்யவும், வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுக்கள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது. 

மேலும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்றவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பல்வேறு தீங்குகளை தரக்கூடிய பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்பட வேண்டும். எனவே, அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக அரசின் இந்த உத்தரவு பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...