ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதலமைச்சர்

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதாவது:- 

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு ஒன்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை (தட்டு, குவளை, தாள்கள்) தடை செய்யவும், வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுக்கள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது. 

மேலும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்றவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பல்வேறு தீங்குகளை தரக்கூடிய பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்பட வேண்டும். எனவே, அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக அரசின் இந்த உத்தரவு பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....