கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.
கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.
சொக்கபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினரின் மகள் அழகுலட்சுமி. ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 1120 மதிப்பெண்கள் பெற்றார்.

கனவு
அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதினர். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்கவில்லை. மாறாக பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) தான் கிடைத்தது. ஆனால், அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. இதனால், அவர் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாரானார்.
அதன்படி, தேர்வை எழுதினார். இதில் அவருக்கு 316 மதிப்பெண்கள் கிடைத்தது. தற்போது பெற்றுள்ள மதிப்பெண் மூலம் அவருக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
வாழ்வில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையில்லை என்பதையும், ஒடுக்குமுறைகளை ஒடுக்கி யாவராலும் மேலே எழ முடியும் என்பதையும் இந்த தேர்வின் மூலம் அழகுலட்சுமி நிரூபித்துள்ளார்.
சொக்கபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினரின் மகள் அழகுலட்சுமி. ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 1120 மதிப்பெண்கள் பெற்றார்.

கனவு
அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதினர். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்கவில்லை. மாறாக பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) தான் கிடைத்தது. ஆனால், அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. இதனால், அவர் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாரானார்.
அதன்படி, தேர்வை எழுதினார். இதில் அவருக்கு 316 மதிப்பெண்கள் கிடைத்தது. தற்போது பெற்றுள்ள மதிப்பெண் மூலம் அவருக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
வாழ்வில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையில்லை என்பதையும், ஒடுக்குமுறைகளை ஒடுக்கி யாவராலும் மேலே எழ முடியும் என்பதையும் இந்த தேர்வின் மூலம் அழகுலட்சுமி நிரூபித்துள்ளார்.