அப்பா 'வாட்ச்-மேன்' மகள் 'டாக்டர்': கோவை மாநகராட்சி பள்ளி மாணவி 'நீட்' வெற்றி

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

சொக்கபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினரின் மகள் அழகுலட்சுமி. ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 1120 மதிப்பெண்கள் பெற்றார்.



கனவு

அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதினர். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்கவில்லை. மாறாக பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) தான் கிடைத்தது. ஆனால், அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. இதனால், அவர் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாரானார்.

அதன்படி, தேர்வை எழுதினார். இதில் அவருக்கு 316 மதிப்பெண்கள் கிடைத்தது. தற்போது பெற்றுள்ள மதிப்பெண் மூலம் அவருக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வாழ்வில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையில்லை என்பதையும், ஒடுக்குமுறைகளை ஒடுக்கி யாவராலும் மேலே எழ முடியும் என்பதையும் இந்த தேர்வின் மூலம் அழகுலட்சுமி நிரூபித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...