கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35). அப்பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். அங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்துவதாக திட்டமிட்டு, கட்டிட வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.
வடக்கு மண்டல உதவி வருவாய் அதிகாரி காளம்மாள், பில் கலெக்டர் மாலா (50) ஆகியோர் வரி விதிப்பு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இது குறித்து சிவக்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கடந்த வாரம் (சனிக்கிழமை) லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வராததால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பில் கலெக்டர் மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்குப் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35). அப்பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். அங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்துவதாக திட்டமிட்டு, கட்டிட வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.
வடக்கு மண்டல உதவி வருவாய் அதிகாரி காளம்மாள், பில் கலெக்டர் மாலா (50) ஆகியோர் வரி விதிப்பு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இது குறித்து சிவக்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கடந்த வாரம் (சனிக்கிழமை) லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வராததால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பில் கலெக்டர் மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்குப் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.