லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியர் கைது

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35). அப்பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். அங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்துவதாக திட்டமிட்டு, கட்டிட வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.

வடக்கு மண்டல உதவி வருவாய் அதிகாரி காளம்மாள், பில் கலெக்டர் மாலா (50) ஆகியோர் வரி விதிப்பு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.

இது குறித்து சிவக்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கடந்த வாரம் (சனிக்கிழமை) லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வராததால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பில் கலெக்டர் மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்குப் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...