நீட் தேர்வு முடிவுகள்: முதல் 50 இடங்களில் தமிழகத்துக்கு ஒரே இடம் - கேரளத்துக்கு அதுவுமில்லை..!

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேரும், நாடு முழுவதும் 12,69,922 பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளின் அடிப்படியில், 7,14,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

50 இடங்கள்

நீட் தேர்வில் முதல் ஐம்பது இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் ஐம்பது இடங்களை தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாணவர்களும் பிடிக்கவில்லை. இதில் டெல்லி அதிகபட்சமாக எட்டு இடங்களைப் பிடித்துள்ளது. 6 இடங்களைப் பிடித்து குஜராத் மாநிலம் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 5 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.





கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில் நாட்டிலேயே என்றும் முதலிடம் பிடிக்கும் கேரளா மாநிலம் இந்த முதல் ஐம்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அதே நேரத்தில், தேர்வு எழுதியவர்களில் 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...