டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.
டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேரும், நாடு முழுவதும் 12,69,922 பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளின் அடிப்படியில், 7,14,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
50 இடங்கள்
நீட் தேர்வில் முதல் ஐம்பது இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் ஐம்பது இடங்களை தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாணவர்களும் பிடிக்கவில்லை. இதில் டெல்லி அதிகபட்சமாக எட்டு இடங்களைப் பிடித்துள்ளது. 6 இடங்களைப் பிடித்து குஜராத் மாநிலம் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 5 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.


கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில் நாட்டிலேயே என்றும் முதலிடம் பிடிக்கும் கேரளா மாநிலம் இந்த முதல் ஐம்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அதே நேரத்தில், தேர்வு எழுதியவர்களில் 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேரும், நாடு முழுவதும் 12,69,922 பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளின் அடிப்படியில், 7,14,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
50 இடங்கள்
நீட் தேர்வில் முதல் ஐம்பது இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் ஐம்பது இடங்களை தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாணவர்களும் பிடிக்கவில்லை. இதில் டெல்லி அதிகபட்சமாக எட்டு இடங்களைப் பிடித்துள்ளது. 6 இடங்களைப் பிடித்து குஜராத் மாநிலம் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 5 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.


கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில் நாட்டிலேயே என்றும் முதலிடம் பிடிக்கும் கேரளா மாநிலம் இந்த முதல் ஐம்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அதே நேரத்தில், தேர்வு எழுதியவர்களில் 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.