கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஒன்றியதிற்கு உட்பட்ட வெள்ளியங்காடு கரியன்குட்டை பகுதியில் அரோமா பார்ம்ஸ் என்ற வாசனை திரவிய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இதனைத் தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடும் போது கோவை, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நீர் மாசு அடைவதுடன் குடிநீரை பருக முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த ஆலை அமைக்கப்பட்டு வரும் பகுதி பாதுகாக்கப்பட்ட அத்திகடவு காப்புக் காடு பகுதி என்பதால் விலங்குகளின் வாழ்விடம் அழிந்து கேள்விக்குறி ஆகிவிடும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மர கொதிகலன் உபயோகிக்கும் பொழுது வெளியேறும் மாசு பொதுமக்களுக்கு நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் போது, வறட்சி காலம் மற்றும் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். எனவே, இந்த ஆலையைத் திறப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
என்று கூறப்பட்டிருந்தது.