வெள்ளியங்காடு பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடுக்க கோரி பொதுமக்கள் மனு

கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஒன்றியதிற்கு உட்பட்ட வெள்ளியங்காடு கரியன்குட்டை பகுதியில் அரோமா பார்ம்ஸ் என்ற வாசனை திரவிய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இதனைத் தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடும் போது கோவை, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நீர் மாசு அடைவதுடன் குடிநீரை பருக முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆலை அமைக்கப்பட்டு வரும் பகுதி பாதுகாக்கப்பட்ட அத்திகடவு காப்புக் காடு பகுதி என்பதால் விலங்குகளின் வாழ்விடம் அழிந்து கேள்விக்குறி ஆகிவிடும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மர கொதிகலன் உபயோகிக்கும் பொழுது வெளியேறும் மாசு பொதுமக்களுக்கு நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் போது, வறட்சி காலம் மற்றும் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். எனவே, இந்த ஆலையைத் திறப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

என்று கூறப்பட்டிருந்தது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....