சிறுமியை கடத்த முயன்றதாகக் கூறி இளைஞரை கட்டி வைத்து அடித்த திருப்பூர் மக்கள்

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்புர் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார்,  உமா தம்பதியர். இவர்கள் இருவரும் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு உமா காட்டுப் பகுதிக்கு சென்றார். சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த இளைஞர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளார்.



இதனைக் கண்ட உமா கூச்சலிட்டதும், அந்த இளைஞர் சிறுமியை கிழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.



இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை மீட்டு மத்திய காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...