நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது.
நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது.
இரவு நேரத்தில் உணவு தேடி வந்த அந்த யானை அங்குள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரை இடித்துத் தள்ளியது. பின் அதே இடத்தில் உடல் நலக் குறைவால் படுத்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்தனர். ஆனால், அதன் வாயில் புண் ஏற்பட்டிருந்ததால் உணவை அதனால் உட்கொள்ள முடியாத நிலை இருந்தது.

தொடர்ந்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர் அதனை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி எலியாஸ் கடை பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலை மோசமாகி யானை உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை அங்கிருந்து அகற்றினர்.
இரவு நேரத்தில் உணவு தேடி வந்த அந்த யானை அங்குள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரை இடித்துத் தள்ளியது. பின் அதே இடத்தில் உடல் நலக் குறைவால் படுத்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்தனர். ஆனால், அதன் வாயில் புண் ஏற்பட்டிருந்ததால் உணவை அதனால் உட்கொள்ள முடியாத நிலை இருந்தது.

தொடர்ந்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர் அதனை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி எலியாஸ் கடை பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலை மோசமாகி யானை உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை அங்கிருந்து அகற்றினர்.