நீலகிரியில் பெண் யானை மரணம்

நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது.

நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது. 

இரவு நேரத்தில் உணவு தேடி வந்த அந்த யானை அங்குள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரை இடித்துத் தள்ளியது. பின் அதே இடத்தில் உடல் நலக் குறைவால் படுத்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்தனர். ஆனால், அதன் வாயில் புண் ஏற்பட்டிருந்ததால் உணவை அதனால் உட்கொள்ள முடியாத நிலை இருந்தது. 



தொடர்ந்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர் அதனை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி எலியாஸ் கடை பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். 

அங்கு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலை மோசமாகி யானை உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை அங்கிருந்து அகற்றினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...