கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா: கோவையில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.



தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர். 

இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.



கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. 

காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். 

காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...