கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர்.
இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர்.
இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.