கோவை: கோவையில் சாதி பெயரைக் கூறி தாக்கியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் சாதி பெயரைக் கூறி தாக்கியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளப்பட்டியை அடுத்த வெள்ளானைபட்டியில் வசித்து வருபவர் சுமதி. இவர் தனது மகன் பிரசாந்த் மற்றும் தாயுடன் அந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி பெயரைக் கூறி அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அடிக்கடி சண்டைபோடுவதாக தெரிகிறது.

இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பானு என்பவரும் அவரது உறவினர்களும் சுமதியின் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதோடு, அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த சுமத்தி வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது உறவினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காளப்பட்டியை அடுத்த வெள்ளானைபட்டியில் வசித்து வருபவர் சுமதி. இவர் தனது மகன் பிரசாந்த் மற்றும் தாயுடன் அந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி பெயரைக் கூறி அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அடிக்கடி சண்டைபோடுவதாக தெரிகிறது.

இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பானு என்பவரும் அவரது உறவினர்களும் சுமதியின் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதோடு, அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த சுமத்தி வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது உறவினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.