பழகுநர் உரிமம் வழங்க லஞ்சம்: வட்டார போக்குவரத்து அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் அதிகப்படியான வாகன பதிவுகளும், ஒட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை பழகுநர் மற்றும் ஒட்டுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறை முன்பு திரண்ட பொதுமக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் உறுதியளித்ததின் பேரில், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...