திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் அதிகப்படியான வாகன பதிவுகளும், ஒட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை பழகுநர் மற்றும் ஒட்டுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறை முன்பு திரண்ட பொதுமக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் உறுதியளித்ததின் பேரில், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் அதிகப்படியான வாகன பதிவுகளும், ஒட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை பழகுநர் மற்றும் ஒட்டுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறை முன்பு திரண்ட பொதுமக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் உறுதியளித்ததின் பேரில், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
