நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.
நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.


இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.
