நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழாவானது, கடந்த மே 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் இனிதே தொடங்கியது. இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி என மாவட்டமே சுற்றுலாப் பயணிகளின் வரத்தால் விழாக் கோலம் பூண்டிருந்தது. கோடை விழாவின் மணி மகுடமாய் கடந்த 18-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கணக்காட்சியை உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவின் நிறைவு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கோடை விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், நீலகிரியின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழாவானது, கடந்த மே 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் இனிதே தொடங்கியது. இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி என மாவட்டமே சுற்றுலாப் பயணிகளின் வரத்தால் விழாக் கோலம் பூண்டிருந்தது. கோடை விழாவின் மணி மகுடமாய் கடந்த 18-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கணக்காட்சியை உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவின் நிறைவு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கோடை விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், நீலகிரியின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.