பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது உதகை கோடை விழா

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது. 



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழாவானது, கடந்த மே 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் இனிதே தொடங்கியது. இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி என மாவட்டமே சுற்றுலாப் பயணிகளின் வரத்தால் விழாக் கோலம் பூண்டிருந்தது. கோடை விழாவின் மணி மகுடமாய் கடந்த 18-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கணக்காட்சியை உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவின் நிறைவு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கோடை விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதில், நீலகிரியின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...