ஜுன் 3-ம் தேதி முதல் கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் :- ரயில் எண் 06040 : கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜுன் 3-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே நாளில் இரவு 08.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜுன் 1) காலை 08 மணி முதல் தொடங்குகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...